சாட்சி 1

சாட்சி 1

என்னுடைய பெயர் சுமதி நான் பார்வையற்ற ஒரு பெண் எனக்கு வயது 40 எனக்கு திருமணமாகி என்னுடைய கணவர் என்னை விட்டு விட்டு சென்று விட்டார் எனக்கு போதிய வருமானம் இல்லை அரசு கொடுக்கும் உதவித்தொகை மாதம் 1500 பெற்றுக் கொண்டிருக்கிறேன்.

வாடகை வீட்டில் வசித்துக் கொண்டிருக்கிறேன் என்னுடைய பெற்றோர்கள் வயது சென்றவர்கள் எனக்கு அண்ணனும் அக்காவும் இருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் என் பெற்றோரை கவனிப்பது கிடையாது.

நான் தான் என் பெற்றோரை கவனித்துக் கொண்டிருக்கிறேன் என் பெற்றோரும் அடிக்கடி என்னிடத்தில் சண்டை போடுவார்கள் என்னை வெளியிடத்திற்கு கூட்டிச் செல்ல மாட்டார்கள் நான் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள் அநேக நேரங்களில் எனக்கு கஷ்டங்களையும் துன்பங்களையும் மன உளைச்சலையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எனக்கு தண்ணீர் எடுத்துக் கொடுக்க மாட்டார்கள் துணி துவைத்து கொடுக்க மாட்டார்கள் போன் ரீசார்ஜ் செய்து கொடுக்க மாட்டார்கள் என்னை மூன்றாவது மனுஷியை போல தான் நடத்துவார்கள் சில நேரங்களில் நான் ஏதாவது ஹாஸ்டலில் சென்று தங்கிவிடலாம் என்று நினைப்பதுண்டு ஒவ்வொரு நாளும் மிகவும் துக்கத்தோடும் துயரத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *