சாட்சி 2
என்னுடைய பெயர் சுரேஷ் எனக்கு வயது 28 நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது கள்ளிப்பால் கண்ணீர் பட்டு என்னுடைய பார்வை குறைந்துவிட்டது முறையான சிகிச்சை எடுக்க முடியவில்லை எனக்கு தகப்பனார் இல்லை தாயார் கூலித் தொழிலாளி.
எனக்கு சகோதரன் ஒருவர் உண்டு தற்பொழுது நரம்பு தளர்ச்சியின் காரணமாக என்னால் நடக்கவும் முடியாது நாங்கள் குடிசை வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்னுடைய சகோதரன் மதுவுக்கு அடிமையாய் இருக்கிறான்.
நான் மளிகை பொருள் வாங்குவதற்காக ஈரோட்டில் இருந்து சென்னைக்கு சென்றேன் புகை வண்டியில் செல்லும்போது தவறி விழுந்து என் கை அடிபட்டுவிட்டது சென்னையில் மளிகை பொருள் வாங்கும்போது நான் தனிமைப்படுத்தப்பட்டேன்.
என்னுடன் சென்றவர்கள் என்னை விட்டு விட்டு சென்றுவிட்டார்கள் எப்படியோ அழுது மற்றவர்கள் உதவி செய்ய என் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன் பல நேரங்களில் நான் வருத்தப்பட்டு அழுவதும் பார்வையில்லை என்பதினால் என்னால் தனிமையில் எதுவும் செய்ய முடியவில்லை.
பிறருடைய உதவியை நாடி வாழ வேண்டியுள்ளது நான் வேலைக்கு செல்ல வேண்டும் சம்பாதிக்க வேண்டும் அம்மாவுக்கு உதவி செய்ய வேண்டும் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை எனக்கு உதவி செய்யுங்கள்